இறந்த பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின்படி, பீளமேடு போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
கோவை: கோவையில் மென்பொறியாளர் மர்ம மரணம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சஞ்சய் அரவிந்த். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சிந்துஜா (29) சி.டி.எஸ்., மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த தம்பதிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே, சிந்துஜா மீண்டும் கர்ப்பமானார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தம்பதியும், குழந்தையும் இருந்தனர். சஞ்சய், மகனுடன் வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டினுள் தனியாக இருந்த சிந்துஜா, மின் விசிறியில் சேலையை கயிறு போல் கட்டியிருக்கும் போட்டோவை கணவருக்கு அனுப்பினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சய் வீட்டுக்குள் ஓடிச் சென்று பார்த்தார். உட்புறமாக தாழிடப்பட்டிருந்த அறை கதவை உடைத்து திறந்தார். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சிந்துஜாவை கீழே இறக்கி, முதலுதவி செய்தார்.
இதையடுத்து, அருகே இருந்தவர்கள் உதவியுடன், மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிந்துஜா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இறந்த சிந்துஜாவின் தாயார் இந்திராணி கொடுத்த புகாரின்படி, பீளமேடு போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
கோவை பீளமேடு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சஞ்சய் அரவிந்த். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சிந்துஜா (29) சி.டி.எஸ்., மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்த தம்பதிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே, சிந்துஜா மீண்டும் கர்ப்பமானார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தம்பதியும், குழந்தையும் இருந்தனர். சஞ்சய், மகனுடன் வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டினுள் தனியாக இருந்த சிந்துஜா, மின் விசிறியில் சேலையை கயிறு போல் கட்டியிருக்கும் போட்டோவை கணவருக்கு அனுப்பினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சய் வீட்டுக்குள் ஓடிச் சென்று பார்த்தார். உட்புறமாக தாழிடப்பட்டிருந்த அறை கதவை உடைத்து திறந்தார். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சிந்துஜாவை கீழே இறக்கி, முதலுதவி செய்தார்.
இதையடுத்து, அருகே இருந்தவர்கள் உதவியுடன், மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிந்துஜா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இறந்த சிந்துஜாவின் தாயார் இந்திராணி கொடுத்த புகாரின்படி, பீளமேடு போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.