பொள்ளாச்சியில் திருமணமான பெண்ணை மிரட்டிய ஆயுதப்படை காவலர் கைது.!!

பொள்ளாச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நேசமணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நேசமணியை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி. இவர் சென்னை மாநகர் பகுதியில் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்ணுக்கும் முகநூலில் ஏற்பட்ட பழக்கத்தால் நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்குப் பின்பு அந்தப் பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.

இதை அறிந்த காவலர் நேசமணி அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு திருமணம் ஆனாலும் என்னுடன் வாழ வேண்டும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து இளம்பெண் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து சென்னையிலிருந்த நேசமணியைக் கைது செய்து பொள்ளாச்சி அழைத்து வந்தனர்.

பின்னர் அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்தால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...