பொள்ளாச்சியைச் சேர்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நேசமணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிரட்டல் விடுத்த சென்னையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் நேசமணியை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி. இவர் சென்னை மாநகர் பகுதியில் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்ணுக்கும் முகநூலில் ஏற்பட்ட பழக்கத்தால் நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்குப் பின்பு அந்தப் பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.
இதை அறிந்த காவலர் நேசமணி அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு திருமணம் ஆனாலும் என்னுடன் வாழ வேண்டும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து இளம்பெண் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து சென்னையிலிருந்த நேசமணியைக் கைது செய்து பொள்ளாச்சி அழைத்து வந்தனர்.
பின்னர் அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்தால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி. இவர் சென்னை மாநகர் பகுதியில் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்ணுக்கும் முகநூலில் ஏற்பட்ட பழக்கத்தால் நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்குப் பின்பு அந்தப் பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.
இதை அறிந்த காவலர் நேசமணி அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு திருமணம் ஆனாலும் என்னுடன் வாழ வேண்டும் என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து இளம்பெண் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து சென்னையிலிருந்த நேசமணியைக் கைது செய்து பொள்ளாச்சி அழைத்து வந்தனர்.
பின்னர் அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம் மற்றும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்தால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார்.