கிணத்துக்கடவில் கஞ்சா வியாபாரி கைது -600 கிராம் கஞ்சா பறிமுதல்.!!

கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் கஞ்சா வியாபாரி வைத்திருந்த 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் கஞ்சா வியாபாரி வைத்திருந்த 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பிரிவு அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், தலைமை காவலர் ஆறுமுகம், முதல்நிலைக் காவலர் குப்புசாமி ஆகியோர் அரசம்பாளையம் பிரிவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான வகையில் மஞ்சப்பை வைத்தபடி வந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் கையில் வைத்திருந்த மஞ்சள் பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபரை வைத்திருந்த 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரனையில் கிணத்துக்கடவு கிருஷ்ணசாமிபுரம் முத்துக்குமார்(40) என்பதும், கிணத்துக்கடவு பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

பின்னர் முத்துக்குமாரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...