கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் கஞ்சா வியாபாரி வைத்திருந்த 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் கஞ்சா வியாபாரி வைத்திருந்த 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பிரிவு அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், தலைமை காவலர் ஆறுமுகம், முதல்நிலைக் காவலர் குப்புசாமி ஆகியோர் அரசம்பாளையம் பிரிவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான வகையில் மஞ்சப்பை வைத்தபடி வந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் கையில் வைத்திருந்த மஞ்சள் பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரை வைத்திருந்த 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரனையில் கிணத்துக்கடவு கிருஷ்ணசாமிபுரம் முத்துக்குமார்(40) என்பதும், கிணத்துக்கடவு பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
பின்னர் முத்துக்குமாரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் பிரிவு அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், தலைமை காவலர் ஆறுமுகம், முதல்நிலைக் காவலர் குப்புசாமி ஆகியோர் அரசம்பாளையம் பிரிவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான வகையில் மஞ்சப்பை வைத்தபடி வந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் கையில் வைத்திருந்த மஞ்சள் பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரை வைத்திருந்த 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரனையில் கிணத்துக்கடவு கிருஷ்ணசாமிபுரம் முத்துக்குமார்(40) என்பதும், கிணத்துக்கடவு பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
பின்னர் முத்துக்குமாரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.