நீலகிரியில் 2007ம் ஆண்டு ஐநூறு ரூபாய் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை..!

2007ம் ஆண்டு நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் வாரிசுச் சான்றிதழ் வழங்க கூலித் தொழிலாளியிடம் 500 கையூட்டு பெற்ற வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரியில் கடந்த 2007ஆம் ஆண்டு ஐநூறு ரூபாய் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும், 6000 ரூபாய் அபராதமும் விதித்து உதகை சார்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

கடந்த 2007ம் ஆண்டு நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தாண்டவ நடராஜன் வருவாய் ஆய்வாளர் வாரிசுச் சான்றிதழ் வழங்க கூலி தொழிலாளியிடம் 500 கையூட்டு பெற்றுள்ளார்.

இதில் கையூட்டு பெற்றதற்காக அவர் மேல் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வந்தது.

இன்று இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றபோது வாரிசுச் சான்றிதழ் கொடுப்பதற்கு கையூட்டாக 500 பெற்ற தாண்டவ நடராஜனுக்கு ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனையும், 6000 ரூபாய் அபராதமும் விதித்து சார்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

வாரிசுச் சான்றிதழுக்காக 500 கையூட்டு பெற்ற இந்த வழக்கில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பு உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...