கோவை கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபர் மீது வழக்கு பதிவு..!

கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் மற்றும் தலைமை காவலர் ரவி ஆகியோர் நேற்று இரவு புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், செக்போஸ்ட் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பழைய செக்போஸ்ட் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த நபர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது.

மேலும், விசாரணையின் போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...