கோவையில் இருந்து வெளி மாவட்ட, மாநிலங்களுக்குச் செல்லும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் செலவுகளை திமுக ஏற்கும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

இதற்காக பள்ளி, கல்லூரிகளில் இருந்து முதல்வரிடம் சிபாரிசு கடிதம் வாங்கி வந்தால் திமுக மொத்த செலவுகளையும் ஏற்றுக் கொள்ளும் என்று அமைச்சர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்ட, மாநிலங்களுக்குச் செல்லும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடைய செலவுகளை திமுக ஏற்றுக்கொள்ளும் என உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.



கோவை பீளமேடு பகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 44-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை ஒருங்கிணைந்த திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

288 அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டியை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் துவக்கி வைத்தார்.



இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதாகவும், இதில் 288 அணிகள் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வேறு மாவட்டம், மாநிலத்திற்கு விளையாட்டுப் போட்டியில் பங்கு பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு, சென்றுவர செலவினங்களை ஒருங்கிணைந்த திமுக ஏற்றுக்கொள்ளும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் இருந்து முதல்வரிடம் சிபாரிசு கடிதம் வாங்கி வந்தால் திமுக மொத்த செலவுகளையும் ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...