கேரளாவில் என் ஐ ஏ கைது செய்த மாவோயிஸ்டிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் சிம் கார்ட் கோவை வெள்ளலூர் பகுதியில் வாங்கப்பட்டது என்பதால் விசாரணை.
கோவை: கோவை வெள்ளலூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் தீவிரவாதி ஒருவர், என் ஐ ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை சோதனை நடத்தியதில் செல்போன் ஒன்று கிடைத்தது. அந்த செல்போனில் இருந்த சிம்கார்டு குறித்த விவரங்களை போலீசார் சேகரித்த போது, அந்த செல்போன் சிம் கார்டு கோவை வெள்ளலூர் பகுதியை அடுத்த இடையர்பாளையம் பகுதியில் உள்ள தட்சணா மொபைல்ஸ் என்ற செல்போன் கடையில் போலி முகவரி கொடுத்து வாங்கப்பட்டது என்று தெரியவந்தது.
இதையடுத்து என்.ஐ.ஏ.அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை கோவை வெள்ளலூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியிலுள்ள அந்த மொபைல் செல்போன் கடைக்கு வந்தனர். தொடர்ந்து, கடையின் உரிமையாளரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், செல்போன் கடையில் உள்ள மற்ற ஆவணங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.
மேலும், செல்போன் கடை உரிமையாளருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு ஏதாவது உள்ளதா.? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் தீவிரவாதி ஒருவர், என் ஐ ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை சோதனை நடத்தியதில் செல்போன் ஒன்று கிடைத்தது. அந்த செல்போனில் இருந்த சிம்கார்டு குறித்த விவரங்களை போலீசார் சேகரித்த போது, அந்த செல்போன் சிம் கார்டு கோவை வெள்ளலூர் பகுதியை அடுத்த இடையர்பாளையம் பகுதியில் உள்ள தட்சணா மொபைல்ஸ் என்ற செல்போன் கடையில் போலி முகவரி கொடுத்து வாங்கப்பட்டது என்று தெரியவந்தது.
இதையடுத்து என்.ஐ.ஏ.அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை கோவை வெள்ளலூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியிலுள்ள அந்த மொபைல் செல்போன் கடைக்கு வந்தனர். தொடர்ந்து, கடையின் உரிமையாளரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், செல்போன் கடையில் உள்ள மற்ற ஆவணங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.
மேலும், செல்போன் கடை உரிமையாளருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு ஏதாவது உள்ளதா.? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.