கோவை வெள்ளலூரில் உள்ள செல்போன் கடையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் திடீர் சோதனை..!

கேரளாவில் என் ஐ ஏ கைது செய்த மாவோயிஸ்டிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் சிம் கார்ட் கோவை வெள்ளலூர் பகுதியில் வாங்கப்பட்டது என்பதால் விசாரணை.


கோவை: கோவை வெள்ளலூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் தீவிரவாதி ஒருவர், என் ஐ ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை சோதனை நடத்தியதில் செல்போன் ஒன்று கிடைத்தது. அந்த செல்போனில் இருந்த சிம்கார்டு குறித்த விவரங்களை போலீசார் சேகரித்த போது, அந்த செல்போன் சிம் கார்டு கோவை வெள்ளலூர் பகுதியை அடுத்த இடையர்பாளையம் பகுதியில் உள்ள தட்சணா மொபைல்ஸ் என்ற செல்போன் கடையில் போலி முகவரி கொடுத்து வாங்கப்பட்டது என்று தெரியவந்தது.

இதையடுத்து என்.ஐ.ஏ.அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை கோவை வெள்ளலூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியிலுள்ள அந்த மொபைல் செல்போன் கடைக்கு வந்தனர். தொடர்ந்து, கடையின் உரிமையாளரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், செல்போன் கடையில் உள்ள மற்ற ஆவணங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.

மேலும், செல்போன் கடை உரிமையாளருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு ஏதாவது உள்ளதா.? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...