கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 3 காட்டு யானைகள் உயிரிழப்பு

கோவையில் ரயில் மோதி தாய் மற்றும் இரண்டு குட்டியானை உயிரிழப்பு..!



கோவை: கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 3 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டம், மதுக்கரை வனச்சரகம், நவக்கரை அருகே இன்று இரவு 9 மணி அளவில் மங்களூர் - சென்னை ரயில் எண் 12602, தண்டவாளத்தை கடக்க முயன்ற மூன்று யானைகள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே மூன்று யானைகளும் பரிதாபமாக இறந்தது. 

ஒரு 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதனுடன் இரண்டு பெண் யானைகள் ரயில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி இறந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் மதுக்கரை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இரயில் மோதி மூன்று யானைகள் பரிதாபமாக இறந்த சம்பவம், கோவை வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...