கோவையில் ரயில் மோதி தாய் மற்றும் இரண்டு குட்டியானை உயிரிழப்பு..!
கோவை: கோவை நவக்கரை அருகே ரயில் மோதி 3 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டம், மதுக்கரை வனச்சரகம், நவக்கரை அருகே இன்று இரவு 9 மணி அளவில் மங்களூர் - சென்னை ரயில் எண் 12602, தண்டவாளத்தை கடக்க முயன்ற மூன்று யானைகள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே மூன்று யானைகளும் பரிதாபமாக இறந்தது.
ஒரு 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதனுடன் இரண்டு பெண் யானைகள் ரயில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி இறந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் மதுக்கரை வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரயில் மோதி மூன்று யானைகள் பரிதாபமாக இறந்த சம்பவம், கோவை வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.