துபாயில் கடந்த 23, 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவில் ராணா சிவகுமார் பங்கேற்று முதல் இடம் பிடித்து வெற்றி.
கோவை: கோவையை சேர்ந்த 6 வயது சிறுவன், ராணா சிவகுமார், துபாயில் கடந்த 23, 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவில் பங்கேற்று முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

கோவை ராம்நகர் பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ராணா சிவக்குமார். துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவின் கலந்துகொள்ள தமிழகத்தில் இருந்து தேர்வாகி, தற்போது போட்டியில் பங்கேற்று முதல் இடம் பெற்றுள்ளார்.
இது குறித்து, சிறுவன் ராணாவின் தந்தை சிவக்குமார் மற்றும் தாயார் கோமதி கூறியதாவது: மூன்று வயதிலிருந்தே பேஷன் ஷோக்களில் ராணா பங்கேற்று வருகிறார். தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வென்று, இதுவரை 15-க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளான். அதேபோல, துபாயில் கடந்த 23, 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவில் ராணா பங்கேற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.
சுமார் 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர். முதல்முறையாக தமிழகத்திலிருந்து ராணா தேர்வு செய்யப்பட்டு இப்போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கோவை ராம்நகர் பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ராணா சிவக்குமார். துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவின் கலந்துகொள்ள தமிழகத்தில் இருந்து தேர்வாகி, தற்போது போட்டியில் பங்கேற்று முதல் இடம் பெற்றுள்ளார்.
இது குறித்து, சிறுவன் ராணாவின் தந்தை சிவக்குமார் மற்றும் தாயார் கோமதி கூறியதாவது: மூன்று வயதிலிருந்தே பேஷன் ஷோக்களில் ராணா பங்கேற்று வருகிறார். தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வென்று, இதுவரை 15-க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளான். அதேபோல, துபாயில் கடந்த 23, 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவில் ராணா பங்கேற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.
சுமார் 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர். முதல்முறையாக தமிழகத்திலிருந்து ராணா தேர்வு செய்யப்பட்டு இப்போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.