துபாயில் சர்வதேச பேஷன் ஷோ: கோவை சிறுவன் முதலிடம்..!

துபாயில் கடந்த 23, 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவில் ராணா சிவகுமார் பங்கேற்று முதல் இடம் பிடித்து வெற்றி.


கோவை: கோவையை சேர்ந்த 6 வயது சிறுவன், ராணா சிவகுமார், துபாயில் கடந்த 23, 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவில் பங்கேற்று முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.



கோவை ராம்நகர் பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ராணா சிவக்குமார். துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவின் கலந்துகொள்ள தமிழகத்தில் இருந்து தேர்வாகி, தற்போது போட்டியில் பங்கேற்று முதல் இடம் பெற்றுள்ளார்.

இது குறித்து, சிறுவன் ராணாவின் தந்தை சிவக்குமார் மற்றும் தாயார் கோமதி கூறியதாவது: மூன்று வயதிலிருந்தே பேஷன் ஷோக்களில் ராணா பங்கேற்று வருகிறார். தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வென்று, இதுவரை 15-க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ளான். அதேபோல, துபாயில் கடந்த 23, 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஜூனியர் பேஷன் ஷோவில் ராணா பங்கேற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.

சுமார் 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர். முதல்முறையாக தமிழகத்திலிருந்து ராணா தேர்வு செய்யப்பட்டு இப்போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...