பாலக்காடு ஆர்.எஸ்.எஸ் கொலை வழக்கு: இரண்டாவது நாளாக பொள்ளாச்சியில் விசாரணை.!!

பாலக்காடு ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை தொடர்பாக, பொள்ளாச்சியில் இரண்டாவது நாளாக தடயவியல் நிபுணர்களுடன் கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.


கோவை: பொள்ளாச்சி பாலக்காடு ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை தொடர்பாக, பொள்ளாச்சியில் இரண்டாவது நாளாக தடயவியல் நிபுணர்களுடன் கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.

கேரள மாநிலம், பாலக்காடு அருகே எலப்புள்ளியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித், 27-கடந்த 15-ம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் இரண்டு பேரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர். கொலையாளிகள் பயன்படுத்திய 'மாருதி 800' கார், 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏஜன்ட் வாயிலாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சி குஞ்சிபாளையம் பிரிவில், பழைய இரும்பு குடோன் வைத்திருக்கும் முருகானந்தம் என்பவரிடம் விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து, இரும்பு குடோனில் கேரள போலீசார் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர். நேற்றும் இரண்டாவது நாளாக விசாரணை தொடர்ந்தது. கேரள போலீசார், தடயவியல் நிபுணர் குழுவுடன், குஞ்சிபாளையம் பிரிவு இரும்பு குடோனில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து கேரள போலீசார் கூறியதாவது:-

கொலையாளிகள் பயன்படுத்திய காரை உறுதி செய்யும் வகையில், ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த காரின் உதிரிப்பாகங்கள் பாதி விற்கப்பட்டு, சேலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கேயும் ஒரு 'டீம்' போலீசார் சென்று, காரின் பாகங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...