பாலக்காடு ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை தொடர்பாக, பொள்ளாச்சியில் இரண்டாவது நாளாக தடயவியல் நிபுணர்களுடன் கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.
கோவை: பொள்ளாச்சி பாலக்காடு ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை தொடர்பாக, பொள்ளாச்சியில் இரண்டாவது நாளாக தடயவியல் நிபுணர்களுடன் கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே எலப்புள்ளியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித், 27-கடந்த 15-ம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் இரண்டு பேரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர். கொலையாளிகள் பயன்படுத்திய 'மாருதி 800' கார், 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏஜன்ட் வாயிலாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சி குஞ்சிபாளையம் பிரிவில், பழைய இரும்பு குடோன் வைத்திருக்கும் முருகானந்தம் என்பவரிடம் விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து, இரும்பு குடோனில் கேரள போலீசார் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர். நேற்றும் இரண்டாவது நாளாக விசாரணை தொடர்ந்தது. கேரள போலீசார், தடயவியல் நிபுணர் குழுவுடன், குஞ்சிபாளையம் பிரிவு இரும்பு குடோனில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கேரள போலீசார் கூறியதாவது:-
கொலையாளிகள் பயன்படுத்திய காரை உறுதி செய்யும் வகையில், ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த காரின் உதிரிப்பாகங்கள் பாதி விற்கப்பட்டு, சேலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கேயும் ஒரு 'டீம்' போலீசார் சென்று, காரின் பாகங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே எலப்புள்ளியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித், 27-கடந்த 15-ம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் இரண்டு பேரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர். கொலையாளிகள் பயன்படுத்திய 'மாருதி 800' கார், 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏஜன்ட் வாயிலாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சி குஞ்சிபாளையம் பிரிவில், பழைய இரும்பு குடோன் வைத்திருக்கும் முருகானந்தம் என்பவரிடம் விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து, இரும்பு குடோனில் கேரள போலீசார் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர். நேற்றும் இரண்டாவது நாளாக விசாரணை தொடர்ந்தது. கேரள போலீசார், தடயவியல் நிபுணர் குழுவுடன், குஞ்சிபாளையம் பிரிவு இரும்பு குடோனில் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கேரள போலீசார் கூறியதாவது:-
கொலையாளிகள் பயன்படுத்திய காரை உறுதி செய்யும் வகையில், ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த காரின் உதிரிப்பாகங்கள் பாதி விற்கப்பட்டு, சேலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கேயும் ஒரு 'டீம்' போலீசார் சென்று, காரின் பாகங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.