மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாகச் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 26-மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கோவை: மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாகச் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 26-மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஒன்றிய அரசு சார்பில் நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத் திட்டங்களை எளிதில் கொண்டு சேர்க்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக தேசிய அடையாள அட்டை (யு.டி.ஐ.டி. அட்டை) கடந்த 2017-ம் ஆண்டு முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த அட்டையைப் பெற இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் சுமார் 33-ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் நிலையில், இவர்களுக்கு யு.டி.ஐ.டி. அட்டை வழங்கும் பணி கோவையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாகச் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 26-மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஒன்றிய அரசு சார்பில் நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத் திட்டங்களை எளிதில் கொண்டு சேர்க்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக தேசிய அடையாள அட்டை (யு.டி.ஐ.டி. அட்டை) கடந்த 2017-ம் ஆண்டு முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த அட்டையைப் பெற இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தில் சுமார் 33-ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் நிலையில், இவர்களுக்கு யு.டி.ஐ.டி. அட்டை வழங்கும் பணி கோவையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாகச் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் 26-மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.