இந்த கூட்டத்தில் அன்றாடம் பிரச்சனை ஏற்படுத்தும் வன விலங்குகளிடம் இருந்து தங்கள் நிலங்களைக் காப்பாற்ற வேண்டி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தங்கள் கோரிகைகளையும், பிரச்சனைகளையும் கூறினார்.

மேலும், அன்றாடம் பிரச்சனை ஏற்படுத்தும் வன விலங்குகளிடம் இருந்து தங்கள் நிலங்களைக் காப்பாற்ற வேண்டி கோரிக்கை வைத்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கொடுத்த மனுக்களில் கூறியதாவது;-

நீர் நிலைகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி ஆவண பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதனை, தடுக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் மூலம் தென்னை விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலங்களின் இடங்களில் ஆறு அடிக்கு கற்கள் நட்டு பச்சை வர்ணம் பூச வேண்டும் என்றும் மழைநீரை வீணாக்காமல் தண்ணீரை சேமித்து வைத்து நிலத்தடி நீரின் மட்டத்தை உயர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தங்கள் கோரிகைகளையும், பிரச்சனைகளையும் கூறினார்.
மேலும், அன்றாடம் பிரச்சனை ஏற்படுத்தும் வன விலங்குகளிடம் இருந்து தங்கள் நிலங்களைக் காப்பாற்ற வேண்டி கோரிக்கை வைத்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கொடுத்த மனுக்களில் கூறியதாவது;-
நீர் நிலைகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தி ஆவண பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதனை, தடுக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் மூலம் தென்னை விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலங்களின் இடங்களில் ஆறு அடிக்கு கற்கள் நட்டு பச்சை வர்ணம் பூச வேண்டும் என்றும் மழைநீரை வீணாக்காமல் தண்ணீரை சேமித்து வைத்து நிலத்தடி நீரின் மட்டத்தை உயர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.