தொட்டிபாளையம் ஊராட்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை மற்றும் 2 லட்சம் கொள்ளவு கொண்ட தரைமட்ட தண்ணீர் தொட்டி ஆகியவற்றை வெள்ளியன்று திறந்து பி.ஆர்.நடராஜன் எம்பி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
கோவை: கோவை கீரணத்தம் ஊராட்சி மற்றும் தொட்டி பாளையம் ஊராட்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பட்டு நிதியில் கட்டப்பட்ட நியாயவிலைக்கடை மற்றும் 2 லட்சம் கொள்ளவு கொண்ட தரைமட்ட தண்ணீர் தொட்டி ஆகியவற்றை இன்று மகோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைத்தார்.

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்.
ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சமுதாயக் கூடங்கள், நியாயவிலைக்கடைகள், தண்ணீர் தொட்டிகள், அங்கன்வாடி கட்டிடங்கள் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்து அம்மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றார்.

இதன் ஒருபகுதியாகக் கோவை கீரணத்தம் ஊராட்சியில் புதிதாக நியாயவிலைக்கடை அமைப்பதற்கு 12.63 லட்சம் ரூபாயும், வெள்ளமடை ஊராட்சி தொட்டி பாளையத்தில் 14.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றும், இத்திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்தது என்றும், இதனையடுத்து இன்று இந்த கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைத்தார்.

கோவை கீரணத்தம் பகுதியில் நியாயவிலைக்கடை திறப்புவிழா மற்றும் வெள்ளமடை ஊராட்சி தொட்டி பாளையத்தில் 2 லட்சம் கொள்ளவு கொண்ட தரைமட்ட தொட்டி கட்டிடங்களைத் திறந்துவைத்து பி.ஆர்.நடராஜன் எம்பி சிறப்புரையாற்றினார்.
இதில் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கிருஷ்ணன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். இதில் சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ப.தோ.ராசு என்கிற ஆர்.பழனிச்சாமி, கீரணத்தம் ஊராட்சி மன்ற துணை தலைவரும், சிபிஎம் எஸ்.எஸ்.குளம் கிழக்கு பகுதி செயலாளருமான ஆர்.கோபல், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.கருப்புசாமி மற்றும் உதவிபொறியாளர் சந்திரகலா, பிடிஓ அனிதா, பரமேஷ்வரி, சிபிஎம் எஸ்.எஸ்.குளம் மேற்கு பகுதி செயலாளர் எம்.சண்முகசுந்தரம், வெள்ளமடை பஞ்சாயத்து துணைத்தலைவர் கனேசன், 9 ஆவர்டு சிபிஎம் உறுப்பினர் சந்திரசேகர், 3 ஆவது வார்டு உறுப்பினர் வெற்றிவேல் மற்றும் கீரணத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தொட்டி பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்.
ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு சமுதாயக் கூடங்கள், நியாயவிலைக்கடைகள், தண்ணீர் தொட்டிகள், அங்கன்வாடி கட்டிடங்கள் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்து அம்மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றார்.
இதன் ஒருபகுதியாகக் கோவை கீரணத்தம் ஊராட்சியில் புதிதாக நியாயவிலைக்கடை அமைப்பதற்கு 12.63 லட்சம் ரூபாயும், வெள்ளமடை ஊராட்சி தொட்டி பாளையத்தில் 14.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி ஆகியவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்றும், இத்திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்தது என்றும், இதனையடுத்து இன்று இந்த கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைத்தார்.
கோவை கீரணத்தம் பகுதியில் நியாயவிலைக்கடை திறப்புவிழா மற்றும் வெள்ளமடை ஊராட்சி தொட்டி பாளையத்தில் 2 லட்சம் கொள்ளவு கொண்ட தரைமட்ட தொட்டி கட்டிடங்களைத் திறந்துவைத்து பி.ஆர்.நடராஜன் எம்பி சிறப்புரையாற்றினார்.
இதில் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கிருஷ்ணன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். இதில் சிபிஎம் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ப.தோ.ராசு என்கிற ஆர்.பழனிச்சாமி, கீரணத்தம் ஊராட்சி மன்ற துணை தலைவரும், சிபிஎம் எஸ்.எஸ்.குளம் கிழக்கு பகுதி செயலாளருமான ஆர்.கோபல், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.கருப்புசாமி மற்றும் உதவிபொறியாளர் சந்திரகலா, பிடிஓ அனிதா, பரமேஷ்வரி, சிபிஎம் எஸ்.எஸ்.குளம் மேற்கு பகுதி செயலாளர் எம்.சண்முகசுந்தரம், வெள்ளமடை பஞ்சாயத்து துணைத்தலைவர் கனேசன், 9 ஆவர்டு சிபிஎம் உறுப்பினர் சந்திரசேகர், 3 ஆவது வார்டு உறுப்பினர் வெற்றிவேல் மற்றும் கீரணத்தம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தொட்டி பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.