பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்கப்பட வேண்டும், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் கூலி உயர்வை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் உள்ளன.
திருப்பூர்: திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் நூல் விலை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

சமீபத்தில் ஏற்றப்பட்ட நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் போலவே விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி, அந்த நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கக்கூடிய தீரன் தொழிற்சங்க பேரவையை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை மாவட்ட ஆட்சியரிடம் சுமார் 50க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வழங்கினர். பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்கப்பட வேண்டும், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் கூலி உயர்வை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், உள்நாட்டு தேவையை கணக்கில் கொண்டு நூல் மற்றும் பங்குகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
சமீபத்தில் ஏற்றப்பட்ட நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் போலவே விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி, அந்த நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கக்கூடிய தீரன் தொழிற்சங்க பேரவையை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை மாவட்ட ஆட்சியரிடம் சுமார் 50க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வழங்கினர். பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்கப்பட வேண்டும், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் கூலி உயர்வை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், உள்நாட்டு தேவையை கணக்கில் கொண்டு நூல் மற்றும் பங்குகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.