திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் நூல் விலை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்கப்பட வேண்டும், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் கூலி உயர்வை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் உள்ளன.


திருப்பூர்: திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் நூல் விலை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.



சமீபத்தில் ஏற்றப்பட்ட நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் போலவே விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி, அந்த நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கக்கூடிய தீரன் தொழிற்சங்க பேரவையை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேசமயம், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை மாவட்ட ஆட்சியரிடம் சுமார் 50க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் வழங்கினர். பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைக்கப்பட வேண்டும், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் கூலி உயர்வை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், உள்நாட்டு தேவையை கணக்கில் கொண்டு நூல் மற்றும் பங்குகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...