காந்திபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.!!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி பழுதடைந்து இடிந்து விழுந்ததில், பேருந்திற்காகக் காத்திருந்த 2-பெண்கள் காயமடைந்தனர். சேதமடைந்து காணப்படும் பிற பகுதிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி பழுதடைந்து இடிந்து விழுந்ததில், பேருந்திற்காகக் காத்திருந்த 2 பெண்கள் காயமடைந்தனர். பேருந்து நிலையத்தில் சேதமடைந்து காணப்படும் பிற பகுதிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் நகரப் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினத்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.



இன்று பேருந்திற்காகப் பயணிகள் சிலர் காத்திருந்த போது, வாளையாறு செல்லும் பேருந்துகள் நிற்கும் பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.



இந்த இடிபாடுகள் விழுந்ததில் பெண் பயணிகள் இருவர் லேசான காயம் அடைந்தனர். அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



கூரையின் ஒரு பகுதி மட்டும் விழுந்ததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ஒருவேளை முழு கூரையும் இடிந்து விழுந்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என சக பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சுமார் 30 ஆண்டுகளுக்கும் முன்பு கட்டப்பட்ட இந்த பேருந்தின் பெரும்பாலான பகுதிகள் உரியப் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது.

தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பழுதடைந்த பகுதிகளைச் சீரமைக்கவோ அல்லது கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவோ அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...