விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 67வது பிறந்தநாள் விழா: கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

மீண்டும் பிரபாகரனின் போராட்டம் வெல்ல வேண்டும் எனவும் தமிழீழம் அமைய வேண்டும் என்ற முழக்கங்கள் அனைவராலும் எழுப்பப்பட்டது.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 67வது பிறந்த நாளை ஒட்டி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் பிரபாகரனின் 67வது பிறந்தநாள் விழா இன்று கோவை காந்திபுரம் பகுதியில் கொண்டாடப்பட்டது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் அதன் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 67வது பிறந்தநாள் என்று குறிப்பிடப்பட்டிருந்த கேக் வெட்டப்பட்டது.



இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர். மேலும், கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரபாகரனின் பிறந்தநாள் விழாவின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளும் விதமாக கேக்கினை பரிமாறிக்கொண்டனர்.

பின்னர், பிரபாகரனின் செயல் மற்றும் தியாகங்கள் குறித்து சொற்பொழிவு நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து, மீண்டும் பிரபாகரனின் போராட்டம் வெல்ல வேண்டும் எனவும் தமிழீழம் அமைய வேண்டும் என்ற முழக்கங்கள் அனைவராலும் எழுப்பப்பட்டது.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...