விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 67வது பிறந்தநாள் விழா: கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

மீண்டும் பிரபாகரனின் போராட்டம் வெல்ல வேண்டும் எனவும் தமிழீழம் அமைய வேண்டும் என்ற முழக்கங்கள் அனைவராலும் எழுப்பப்பட்டது.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 67வது பிறந்த நாளை ஒட்டி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் பிரபாகரனின் 67வது பிறந்தநாள் விழா இன்று கோவை காந்திபுரம் பகுதியில் கொண்டாடப்பட்டது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் அதன் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 67வது பிறந்தநாள் என்று குறிப்பிடப்பட்டிருந்த கேக் வெட்டப்பட்டது.



இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர். மேலும், கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரபாகரனின் பிறந்தநாள் விழாவின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளும் விதமாக கேக்கினை பரிமாறிக்கொண்டனர்.

பின்னர், பிரபாகரனின் செயல் மற்றும் தியாகங்கள் குறித்து சொற்பொழிவு நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து, மீண்டும் பிரபாகரனின் போராட்டம் வெல்ல வேண்டும் எனவும் தமிழீழம் அமைய வேண்டும் என்ற முழக்கங்கள் அனைவராலும் எழுப்பப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...