இல்லம் தேடி கல்வி திட்டம்: கோவையில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்..!

மாவட்டம் தோறும், சுமார் 30 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தில் 6 குழுக்கள் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளனர்.


கோவை: கோவையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

கொரோனா பேரிடர் காலத்தில் இணைய வாயிலாக கல்வி கற்க முடியாமல் பல மாணவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனை சரிசெய்யும் பொருட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'கல்வி டிவி'யில் பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டன. இருப்பினும், பல மாணவர்களுக்கு கற்பித்தல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தன்னார்வலர்கள் உதவியுடன் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, டியூஷன் எடுக்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தமிழக கல்வித்துறை அறிமுகப்படுத்தியது.



இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அதன் செயல்பாடு குறித்தான பல்வேறு சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் நிலவி வருகிறது.

எனவே, தமிழ்நாடு பள்ளி கல்வி துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் "இல்லம் தேடி கல்வி" திட்டம் குறித்து விழிப்புணர்வு நடத்த திட்டமிடப்பட்டு, அதன்படி விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் இத்திட்டம் குறித்தான விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்டம் தோறும், சுமார் 30 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தில் 6 குழுக்கள் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளனர்.



குறிப்பாக, கிராம புறங்களில் அதிக கவனம் செலுத்தி விழிப்புணர்வு நடைபெற உள்ளது. இந்த கலை பயணத்தை மேற்கொள்ள உள்ள கலைக்குழுவினருக்கும், கல்வி துறையினருக்கும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்து, விழிப்புணர்வு பயணத்தை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட கல்வி துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...