Exclusive: கோவையில் முதல் முறையாக 'லோக் அதாலத்' : 15-வழக்குகளுக்கு தீர்வு.!!

கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் முதல் முறையாக 'லோக் அதாலத்' இன்று நடைப்பெற்றது. இதில் 82-வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 15-வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் முதல் முறையாக 'லோக் அதாலத்' இன்று நடைப்பெற்றது. இதில் 15 வழக்குகளுக்குக் கிடைத்தது தீர்வு கிடைத்தது.

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக நுகர்வோர் நீதிமன்றத்தில் இன்று 'லோக் அதாலத்' நடத்தப்பட்டது. கோவை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி பணியிடம் காலியாக உள்ள காரணத்தால், சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி நசீர் அகமது, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற உறுப்பினர் எஸ்.சரஸ்வதி உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் 'லோக் அதாலத்' நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இன்று நடந்த 'லோக் அதாலத்' மூலம் 82 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 15 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 'லோக் அதாலத்' குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் முதல் முறையாக 'லோக் அதாலத்' நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...