கோவை மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு -நாளை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை..!

அரசு அதிகாரிகள் வரும் வெள்ளியன்று காலை 12.30-மணிக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் டவுன் பிளான் அதிகாரிகள், பொதுமக்கள், சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என உறுதியளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.


கோவை: அரசு அதிகாரிகள் வரும் வெள்ளியன்று காலை 12.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் டவுன் பிளான் அதிகாரிகள் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என உறுதியளித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

கோவை வரதராஜபுரம் டி மார்ட் அருகே மாநகராட்சி நிலத்தை ஜீ ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பி வருவதாக கூறப்படும் நிலையில் இதனை கண்டித்து வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் பாதை பறி போகிறது என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து அரசு அதிகாரிகளிடம் கூறுகையில், காமராஜர் சாலையில் நிலங்களை ஆக்கிரமித்து, அரசு அதிகாரிகளை தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டு வருவது தெரிகிறது.

இதனால் மக்கள் செல்லும் பாதை பறிபோகும் என மக்கள் அச்சப்படுகின்றனர். சாலையை ஆக்கிரமிக்கப்படுகிறது என இப்பகுதி மக்கள் ஏற்கனவே மாநகராட்சியிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த மனு மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் காலை முதல் மறியல் போராட்டம் நடத்திவருகின்றனர். மேலும், வட்டாரத்தை சார்ந்த அனைவரும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அரசு இடத்தை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் உடனடியாக அதிகாரிகள் நில அளவை செய்ய வேண்டும்.

மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையைக் குறுக்கி அழகுபடுத்தும் நோக்கில் செய்யப்படும் மாற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே இங்கிருந்து மாற்றப்பட்ட பேருந்து நிழல்குடையை பழைய இடத்திற்கே கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.

பொதுமக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்த அதிகாரிகள் அவசர அவசரமாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்தனர். இதனையடுத்து வட்டாட்சியர் தலைமையில் நில அளவையர் மற்றும் மாநகராட்சி ஏடிபி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அளக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து வெள்ளியன்று காலை 12 30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் டவுன் பிளான் அதிகாரிகள் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...