இதன்படி, இப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் 6 ஆயிரம் ரூபாய் மலைவாழ்படி கிடைப்பது உறுதியாகி உள்ளது.
கோவை: கோவையில் மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கும் அரசு ஆணையை வரவேற்பதாக கோவை எம்.பி., நடராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தில் மலைப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கப்பட்டு வந்தது. வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ்படி பெறுகின்றனர்.
இந்நிலையில், காரமடை உள்ளிட்ட பல பகுதிகளில் மலைவாழ்படி வழங்கப்படவில்லை. 35 ஆண்டுகளாக மலைவாழ்படி பெறமுடியாமல், சட்ட நடவடிக்கைக்கு சென்றனர்.
இருப்பினும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இதுகுறித்து, கோவை எம்.பி., நடராஜன் கடந்த 29ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இத்துறை சார்ந்த பல்வேறு தரப்பினருக்கும் கடிதம் எழுதி, தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி காரமடை வட்டார கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், காரமடை வட்டாரத்தில் பரளி உள்ளிட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கப்படும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.
இதன்படி, இப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம், 6 ஆயிரம் ரூபாய் மலைவாழ்படி கிடைப்பது உறுதியாகி உள்ளது.
இது குறித்து எம்.பி., நடராஜன் கூறுகையில், ''காரமடை வட்டார மலைப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கப்படவுள்ளதாக அறிந்தேன்.
கல்வித்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கவனத்திற்கு வராத பல பள்ளிகள் உள்ளன. உடனடியாக அதிகாரிகளிடம் கலந்து விவாதித்து, அனைத்து மலைப்பகுதி பள்ளி ஆசிரியர்களுக்கும் மலைவாழ்படி கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்,'' என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் மலைப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கப்பட்டு வந்தது. வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ்படி பெறுகின்றனர்.
இந்நிலையில், காரமடை உள்ளிட்ட பல பகுதிகளில் மலைவாழ்படி வழங்கப்படவில்லை. 35 ஆண்டுகளாக மலைவாழ்படி பெறமுடியாமல், சட்ட நடவடிக்கைக்கு சென்றனர்.
இருப்பினும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இதுகுறித்து, கோவை எம்.பி., நடராஜன் கடந்த 29ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இத்துறை சார்ந்த பல்வேறு தரப்பினருக்கும் கடிதம் எழுதி, தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி காரமடை வட்டார கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், காரமடை வட்டாரத்தில் பரளி உள்ளிட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கப்படும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.
இதன்படி, இப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம், 6 ஆயிரம் ரூபாய் மலைவாழ்படி கிடைப்பது உறுதியாகி உள்ளது.
இது குறித்து எம்.பி., நடராஜன் கூறுகையில், ''காரமடை வட்டார மலைப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கப்படவுள்ளதாக அறிந்தேன்.
கல்வித்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கவனத்திற்கு வராத பல பள்ளிகள் உள்ளன. உடனடியாக அதிகாரிகளிடம் கலந்து விவாதித்து, அனைத்து மலைப்பகுதி பள்ளி ஆசிரியர்களுக்கும் மலைவாழ்படி கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்,'' என்று தெரிவித்தார்.