கோவையில் மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கும் அரசாணைக்கு பி.ஆர் நடராஜன் எம்பி வரவேற்பு..!

இதன்படி, இப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் 6 ஆயிரம் ரூபாய் மலைவாழ்படி கிடைப்பது உறுதியாகி உள்ளது.


கோவை: கோவையில் மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கும் அரசு ஆணையை வரவேற்பதாக கோவை எம்.பி., நடராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் மலைப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கப்பட்டு வந்தது. வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ்படி பெறுகின்றனர்.

இந்நிலையில், காரமடை உள்ளிட்ட பல பகுதிகளில் மலைவாழ்படி வழங்கப்படவில்லை. 35 ஆண்டுகளாக மலைவாழ்படி பெறமுடியாமல், சட்ட நடவடிக்கைக்கு சென்றனர்.

இருப்பினும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இதுகுறித்து, கோவை எம்.பி., நடராஜன் கடந்த 29ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இத்துறை சார்ந்த பல்வேறு தரப்பினருக்கும் கடிதம் எழுதி, தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி காரமடை வட்டார கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், காரமடை வட்டாரத்தில் பரளி உள்ளிட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கப்படும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.

இதன்படி, இப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம், 6 ஆயிரம் ரூபாய் மலைவாழ்படி கிடைப்பது உறுதியாகி உள்ளது.

இது குறித்து எம்.பி., நடராஜன் கூறுகையில், ''காரமடை வட்டார மலைப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மலைவாழ்படி வழங்கப்படவுள்ளதாக அறிந்தேன்.

கல்வித்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கவனத்திற்கு வராத பல பள்ளிகள் உள்ளன. உடனடியாக அதிகாரிகளிடம் கலந்து விவாதித்து, அனைத்து மலைப்பகுதி பள்ளி ஆசிரியர்களுக்கும் மலைவாழ்படி கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்,'' என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...