கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!

இந்த வழக்கில் பாலக்காடு மாவட்டம் நல்லபிள்ளி, நீலிப்பதனை சேர்ந்த டிரைவர் ராமகிருஷ்ணன் (39) கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கேரளாவுக்கு லாரி ஒன்றில் அரிசி கடத்தப்படுவதாக, நேற்றிரவு மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் வைரம் தலைமையில், எஸ்.ஐ.,கவியரசு, எஸ்.எஸ்.ஐ., கதிரேசன், போலீஸ்காரர் குமரேசன் ஆகியோர், மதுக்கரை மரப்பாலம் அடுத்த பெட்ரோல் பங்க் அருகே, கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியே வந்த ஐஸர் 709 (பதிவெண் கே எல்.02. ஏ.பி..2350) லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, 10 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்து, காவல் நிலையத்துக்கு லாரி கொண்டு செல்லப்பட்டது.

விசாரணையில் சுந்தராபுரம் பகுதியிலிருந்து, கஞ்சிக்கோட்டுக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, பாலக்காடு மாவட்டம், நல்லபிள்ளி, நீலிப்பதனை சேர்ந்த டிரைவர் ராமகிருஷ்ணன் (39) கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, பொள்ளாச்சி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...