கோவையில் 13-வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தல்.!!

கிணத்துக்கடவில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 13-வயது சிறுமியைக் கடத்திச் சென்ற 27-வயதான ஆட்டோ டிரைவரை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.


கோவை: கிணத்துக்கடவில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியைக் கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி கிணத்துக்கடவில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த மாணவி கடந்த 21-ம் தேதி காலை அவரது வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் அந்த மாணவியின் பெற்றோர் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தனர்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அந்த சிறுமியுடன் ஒரு வாலிபர் கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் நிற்பதைக் கண்ட அந்த சிறுமியின் தந்தை இருவரையும் அழைத்து கிணத்துக்கடவு காவல்துறை நிலையத்திற்குக் கொண்டுவந்தனர்.

பின்னர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது அந்த மாணவியை கிணத்துக்கடவு பகுதி சிக்கலாம் பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான 27 வயதான சேகர் என்ற வாலிபர் திருமணம் செய்வதாகக் கூறி ஆசைவார்த்தை காட்டி அழைத்துச் சென்றதாகக் கூறினார் இதனையடுத்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சேகரைக் கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...