கிணத்துக்கடவில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 13-வயது சிறுமியைக் கடத்திச் சென்ற 27-வயதான ஆட்டோ டிரைவரை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை: கிணத்துக்கடவில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியைக் கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி கிணத்துக்கடவில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த மாணவி கடந்த 21-ம் தேதி காலை அவரது வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் அந்த மாணவியின் பெற்றோர் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அந்த சிறுமியுடன் ஒரு வாலிபர் கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் நிற்பதைக் கண்ட அந்த சிறுமியின் தந்தை இருவரையும் அழைத்து கிணத்துக்கடவு காவல்துறை நிலையத்திற்குக் கொண்டுவந்தனர்.
பின்னர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது அந்த மாணவியை கிணத்துக்கடவு பகுதி சிக்கலாம் பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான 27 வயதான சேகர் என்ற வாலிபர் திருமணம் செய்வதாகக் கூறி ஆசைவார்த்தை காட்டி அழைத்துச் சென்றதாகக் கூறினார் இதனையடுத்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சேகரைக் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி கிணத்துக்கடவில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
இந்த மாணவி கடந்த 21-ம் தேதி காலை அவரது வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் அந்த மாணவியின் பெற்றோர் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அந்த சிறுமியுடன் ஒரு வாலிபர் கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் நிற்பதைக் கண்ட அந்த சிறுமியின் தந்தை இருவரையும் அழைத்து கிணத்துக்கடவு காவல்துறை நிலையத்திற்குக் கொண்டுவந்தனர்.
பின்னர் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது அந்த மாணவியை கிணத்துக்கடவு பகுதி சிக்கலாம் பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான 27 வயதான சேகர் என்ற வாலிபர் திருமணம் செய்வதாகக் கூறி ஆசைவார்த்தை காட்டி அழைத்துச் சென்றதாகக் கூறினார் இதனையடுத்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சேகரைக் கைது செய்தனர்.