மேலும், குடிநீர் விநியோகம், குடிநீரின் தரம் மற்றும் குளோரின் அளவு போன்றவற்றைக் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பரிசோதனை செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலப் பகுதிகளில் 24X7 குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., இன்று (24.11.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 66க்குட்பட்ட மீனா எஸ்டேட் 5வது கிராஸ் வீதியில் 24x7 குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் குழாய் அமைத்த பின்பு சாலை உடனடியாக சீரமைக்கவும் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 5க்குட்பட்ட ஹெச்.எஸ். காலனி, எம்.ஜி.ஆர் விதியில் 24x7 திட்டத்தின் கீழ் பகிர்மானக் குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்துக் கேட்டறிந்தார்.
மேலும், குடிநீர் போதிய அளவு அழுத்தத்தில் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். அதற்கு குடிநீர் போதிய அளவு அழுத்தத்தில் கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து, குடிநீர் விநியோகம், குடிநீரின் தரம் மற்றும் குளோரின் அளவு போன்றவற்றைக் குறித்து பரிசோதனை செய்யப்பட்டதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் பரிசோதனை செய்தார்.
இந்த ஆய்வின்போது, உதவி ஆணையாளர் செந்தில்குமார் இரத்தினம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், 24X7 உதவி செயற்பொறியாளர் ராமசாமி, சூயஸ் நிறுவன மேலாளர் முத்துபாபு, உதவி பொறியாளர் எழில் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.