கோவையில் 24X7 குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு..!

மேலும், குடிநீர் விநியோகம், குடிநீரின் தரம் மற்றும் குளோரின் அளவு போன்றவற்றைக் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பரிசோதனை செய்தார்.



கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலப் பகுதிகளில் 24X7 குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., இன்று (24.11.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 66க்குட்பட்ட மீனா எஸ்டேட் 5வது கிராஸ் வீதியில் 24x7 குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் பிரதான குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.



பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் குழாய் அமைத்த பின்பு சாலை உடனடியாக சீரமைக்கவும் கேட்டுக்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண் 5க்குட்பட்ட ஹெச்.எஸ். காலனி, எம்.ஜி.ஆர் விதியில் 24x7 திட்டத்தின் கீழ் பகிர்மானக் குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்துக் கேட்டறிந்தார்.

மேலும், குடிநீர் போதிய அளவு அழுத்தத்தில் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். அதற்கு குடிநீர் போதிய அளவு அழுத்தத்தில் கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து, குடிநீர் விநியோகம், குடிநீரின் தரம் மற்றும் குளோரின் அளவு போன்றவற்றைக் குறித்து பரிசோதனை செய்யப்பட்டதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் பரிசோதனை செய்தார்.

இந்த ஆய்வின்போது, உதவி ஆணையாளர் செந்தில்குமார் இரத்தினம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், 24X7 உதவி செயற்பொறியாளர் ராமசாமி, சூயஸ் நிறுவன மேலாளர் முத்துபாபு, உதவி பொறியாளர் எழில் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...