ஈஷாவிற்கு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு..!

மீண்டும் புதிய தேதி, நேரம் குறிப்பிட்டு ஈஷா மையத்திற்கு குழந்தைகள் ஆணையம் சம்மன் அனுப்பவும், சம்மன் கிடைத்த இரு வாரங்களில் ஈஷா யோக மையம் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திற்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.


கோவை: ஈஷாவிற்கு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்திற்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பிய விவகாரத்தில் சம்மனை ரத்து செய்யக் கோரி ஈஷா மையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்த நிலையில் சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த முழு அதிகாரம் உள்ளது. சட்டப்படி அனுப்பப்பட்ட சம்மனை எதிர்க்கும் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

மீண்டும் புதிய தேதி, நேரம் குறிப்பிட்டு ஈஷா மையத்திற்கு குழந்தைகள் ஆணையம் சம்மன் அனுப்பவும், சம்மன் கிடைத்த இரு வாரங்களில் ஈஷா யோக மையம் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்திற்கு பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...