டெங்கு காய்ச்சலால் ஒரு வயது பெண் குழந்தை பலி


திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற ஒரு வயது குழந்தைக்கு கடந்த ஒரு வாரகாலமாக காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் கீர்த்தனாவின் பெற்றோர் அவரை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தொடர்ந்து, அந்த மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் கடந்த 24ம் தேதி கீர்த்தனா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 25ம் தேதி அதிகாலை பறிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து வழக்குப்பதிந்த பந்தய சாலை போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த பரிசோதனையின் முடிவு நேற்று வெளியானது. அதில், கீர்த்தனாவுக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததும். அதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. 

கடந்த ஒரு மாதகாலமாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் எடுத்துவரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பது அம்மாவட்ட மக்களை பீதியடையச்செய்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...