திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத் திறப்பு விழா - ஜே.பி.நட்டா வருகை..!

திருப்பூர் வித்யாலயம் பகுதியில் புதியதாக பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று திருப்பூர் வருகிறார். இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.



திருப்பூர் வித்யாலயம் பகுதியில் புதியதாக பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. நூலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. மாலை 3 மணி அளவில் இந்த அலுவலக திறப்பு விழா நடைபெறுகிறது.

இதனையடுத்து, இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொண்டு திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் உள்பட அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.



மேலும், இந்த விழாவுக்காக திருப்பூர் பல்லடம் ரோட்டில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொடி தோரணங்கள் அமைக்கப்பட்டு ஏராளமான தட்டி போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.



முன்னதாக திருப்பூர் லட்சுமி கல்யாண மண்டபத்தில் அந்தக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டமானது நடைபெறுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...