திருப்பூரில் நடைபெறும் பா.ஜ.க செயற்குழுவில் பங்கேற்க வந்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அக்கட்சியினர் மலர் தூவி உற்சாக வரவேற்பு..!

உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டில் கேட்க வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசிக்க இருக்கின்றார்.



திருப்பூர்: உள்ளாட்சி தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் விதமாக திருப்பூரில் நடைபெறும் பா.ஜ.க செயற்குழுவில் பங்கேற்க வந்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அக்கட்சியினர் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.



பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உடன் வந்தார்.



கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அக்கட்சியினர் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.



அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த வாகனத்தில் இருந்த படி தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்ட ஜே.பி.நட்டா கார் மூலம் திருப்பூர் சென்றார்.

திருப்பூரில் பிற்பகல் நடைபெறும் பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் அவர், உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீட்டில் கேட்க வேண்டிய இடங்கள் குறித்தும் ஆலோசிக்க இருக்கின்றார்.

பின்னர் மாலையில் திருப்பூர் வடக்கு பா.ஜ.க புதிய கட்டிடத்தை திறத்து வைக்கின்றார். அங்கிருத்தபடியே ஈரோடு, திருநெல்வேலி, வாணியம்பாடி ஆகிய இடங்களில் புதியதாக கட்டப்பட்ட கட்சி அலுவலகங்களை வீடியோ கான்பிரன்சிங் முறையில் திறந்து வைக்கின்றார்.

அதனை தொடர்ந்து, மாலையில் திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் ஜே.பி.நட்டா பங்கேற்கின்றார். இந்த கூட்டத்தில் பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். உள்ளாட்சி தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்தும் விதமாக ஜே.பி.நட்டாவின் பயணம் அமையும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Newsletter

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...