முதலமைச்சருக்கு தமிழக ஜவுளித்துறை சார்பில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கல்.!!

62-ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதலமைச்சருக்கு தமிழக ஜவுளித்துறை சார்பில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தனர்.


கோவை: 62-ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதலமைச்சருக்கு தமிழக ஜவுளித்துறை சார்பில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தனர்.

பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீதான மார்க்கெட் கமிட்டி 1% கட்டணம் ஜவுளி தொழில் துறையினருக்கு மிகப் பெரிய சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. கடந்த 62 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், ஜவுளிதொழில் துறையினர் எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சனை குறித்து அறிந்து உடனடியாக பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீதான மார்க்கெட் கமிட்டி 1% கட்டணத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார்.



வரலாற்று சிறப்புமிக்க இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவையில் இன்று இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின்(CITI)தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய மில்கள் சங்கத்தின்(SIMA) தலைவர் ரவிசாம், தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின்(OSMA) நிர்வாகி, அருள்மொழி உள்ளிட்ட ஜவுளி தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி கூறி தமிழக ஜவுளித்துறை சார்பில் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...