62-ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதலமைச்சருக்கு தமிழக ஜவுளித்துறை சார்பில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தனர்.
கோவை: 62-ஆண்டு கால பிரச்சினைக்கு தீர்வு கண்ட முதலமைச்சருக்கு தமிழக ஜவுளித்துறை சார்பில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கி நன்றி தெரிவித்தனர்.
பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீதான மார்க்கெட் கமிட்டி 1% கட்டணம் ஜவுளி தொழில் துறையினருக்கு மிகப் பெரிய சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. கடந்த 62 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், ஜவுளிதொழில் துறையினர் எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சனை குறித்து அறிந்து உடனடியாக பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீதான மார்க்கெட் கமிட்டி 1% கட்டணத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவையில் இன்று இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின்(CITI)தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய மில்கள் சங்கத்தின்(SIMA) தலைவர் ரவிசாம், தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின்(OSMA) நிர்வாகி, அருள்மொழி உள்ளிட்ட ஜவுளி தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி கூறி தமிழக ஜவுளித்துறை சார்பில் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீதான மார்க்கெட் கமிட்டி 1% கட்டணம் ஜவுளி தொழில் துறையினருக்கு மிகப் பெரிய சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. கடந்த 62 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், ஜவுளிதொழில் துறையினர் எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சனை குறித்து அறிந்து உடனடியாக பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீதான மார்க்கெட் கமிட்டி 1% கட்டணத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவையில் இன்று இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின்(CITI)தலைவர் ராஜ்குமார், தென்னிந்திய மில்கள் சங்கத்தின்(SIMA) தலைவர் ரவிசாம், தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின்(OSMA) நிர்வாகி, அருள்மொழி உள்ளிட்ட ஜவுளி தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி கூறி தமிழக ஜவுளித்துறை சார்பில் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.