இஸ்லாமிய கூட்டமைப்பினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.!!

சிறைவாசிகள் விடுதலை குறித்து கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.


கோவை: சிறைவாசிகள் விடுதலை குறித்து கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

கோவைக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்று உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலினை நேற்று இரவு கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் மூன்று பேர் சிறைவாசிகள் விடுதலை குறித்துச் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், இரவு முதலமைச்சர் சுற்றுப் பயணத்தை முடித்து தாமதமான நிலையில் இன்று காலை நேரம் ஒதுக்கப்பட்டது.

ஒதுக்கப்பட்ட நேரத்தில் கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கி இருக்கும் இடத்திற்கு இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சென்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க மூன்று கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜி இனாயத்துல்லாஹ், மஜக சுல்தான் அமீர், தமுமுக சாதிக் அலி செல்வதற்கு அனுமதி வழங்கி முதலமைச்சர் அறைக்குள் சென்றனர்.

முதலமைச்சர் இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகளை அறைக்குள் அழைத்து அமர வைத்து கோரிக்கைகளைக் கேட்டார்.

அப்போது கூட்டமைப்பு நிர்வாகிகள் சிறைவாசிகள் விடுதலை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை குறித்தும் அதில் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை ஆகும் வண்ணம் மாற்றி அமைக்க வேண்டும் என்ற தெளிவாகக் கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்கள்.

பெரிய சுற்று பயண நடுவே கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரம் ஒதுக்கி உட்கார வைத்து அனைத்தும் கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இது குறித்து உடனடியாக பார்ப்பதாகத் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:-இஸ்லாமிய சமுதாயத்தின் கோரிக்கையைச் சம்பந்தப்பட்ட மாவட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் இடத்தில் நேரம் ஒதுக்கிக் கேட்ட முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.

உரிய முயற்சி செய்து சரியான நேரத்தில் கோரிக்கை வைக்கப் பல முயற்சிகளைச் செய்த கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கும் இந்த சந்திப்பதற்கு உரிய முயற்சி எடுத்துக் கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...