கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக் காலங்களில் மழைநீர் சாலையில் தேங்காமல் வடிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக் காலங்களில் மழைநீர் சாலையில் தேங்காமல் வடிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக கள்ளிமடை அருகே சங்கனூர் பிரதான கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றி கால்வாயிலுள்ள செடி, கொடிகளைத் தூர்வாரி மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன.
அதே போல் கோவை மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கால்வாய்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை முழுவதுமாக அகற்றி தடையின்றி மழைநீர் செல்ல தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மழைநீர் தங்குதடையின்றி செல்ல ஜே.சி.பி.இயந்திரங்கள் உதவியுடன் அனைத்து கால்வாய்களிலும் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. கழிவு நீர் கால்வாய் அடைப்புகள் சூப்பர் சக்கர் வாகனம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மேம்பாலங்கள் கீழ் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. போதுமான அளவு மோட்டார்களும் உள்ளன,’’ என்றார்.
இதன் ஒருபகுதியாக கள்ளிமடை அருகே சங்கனூர் பிரதான கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றி கால்வாயிலுள்ள செடி, கொடிகளைத் தூர்வாரி மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன.
அதே போல் கோவை மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கால்வாய்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை முழுவதுமாக அகற்றி தடையின்றி மழைநீர் செல்ல தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மழைநீர் தங்குதடையின்றி செல்ல ஜே.சி.பி.இயந்திரங்கள் உதவியுடன் அனைத்து கால்வாய்களிலும் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. கழிவு நீர் கால்வாய் அடைப்புகள் சூப்பர் சக்கர் வாகனம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மேம்பாலங்கள் கீழ் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. போதுமான அளவு மோட்டார்களும் உள்ளன,’’ என்றார்.