கோவையில் மழை காலங்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கைகள் தீவிரம்.!!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக் காலங்களில் மழைநீர் சாலையில் தேங்காமல் வடிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக் காலங்களில் மழைநீர் சாலையில் தேங்காமல் வடிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக கள்ளிமடை அருகே சங்கனூர் பிரதான கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றி கால்வாயிலுள்ள செடி, கொடிகளைத் தூர்வாரி மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன.

அதே போல் கோவை மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கால்வாய்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை முழுவதுமாக அகற்றி தடையின்றி மழைநீர் செல்ல தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மழைநீர் தங்குதடையின்றி செல்ல ஜே.சி.பி.இயந்திரங்கள் உதவியுடன் அனைத்து கால்வாய்களிலும் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. கழிவு நீர் கால்வாய் அடைப்புகள் சூப்பர் சக்கர் வாகனம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மேம்பாலங்கள் கீழ் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. போதுமான அளவு மோட்டார்களும் உள்ளன,’’ என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...