கோவையில் மழை காலங்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கைகள் தீவிரம்.!!

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக் காலங்களில் மழைநீர் சாலையில் தேங்காமல் வடிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக் காலங்களில் மழைநீர் சாலையில் தேங்காமல் வடிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக கள்ளிமடை அருகே சங்கனூர் பிரதான கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றி கால்வாயிலுள்ள செடி, கொடிகளைத் தூர்வாரி மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன.

அதே போல் கோவை மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கால்வாய்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை முழுவதுமாக அகற்றி தடையின்றி மழைநீர் செல்ல தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மழைநீர் தங்குதடையின்றி செல்ல ஜே.சி.பி.இயந்திரங்கள் உதவியுடன் அனைத்து கால்வாய்களிலும் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. கழிவு நீர் கால்வாய் அடைப்புகள் சூப்பர் சக்கர் வாகனம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மேம்பாலங்கள் கீழ் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. போதுமான அளவு மோட்டார்களும் உள்ளன,’’ என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...