கோவையில் உள்ள அனைத்து மேம்பால தூண்களை அழகுற மாற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை.!!

சுங்கம் மேம்பாலத்தில் - வ.உ.சி, அப்துல் கலாம் படங்கள் ஒட்டப்பட்டுள்ளதால், அதேபோல், கோவையில் உள்ள அனைத்து மேம்பால தூண்களை அழகுற மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகரில் தற்போது காந்திபுரம் மேம்பாலம், அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம் ஆகிய மேம்பாலங்கள் பயன்பாட்டிலிருந்து வருகிறது. தற்போது அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

கோவையில் பயன்பாட்டிலிருந்து வரும் மேம்பாலங்களின் தூண்களில் கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் போஸ்டர்கள் ஒட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் உருமாற்ற தடைச்சட்டம் 1959ன் படி அரசு அலுவலகங்கள், மேம்பாலங்கள், அரசுப்பேருந்துகள் ஆகியவற்றில் போஸ்டர்கள் ஒட்டவும், விளம்பரங்கள் செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளன என்ற போதும் போஸ்டர்கள் ஒட்டுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தற்போது திருச்சி சாலையில் சுங்கம் பகுதியில் கட்டுமானத்தில் உள்ள இரண்டு தூண்களில் அரசியல் கட்சியினர் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

இதனிடையே கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக வந்ததால், அவசர ஏற்பாடாக இரண்டு தூண்களிலிருந்து போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.



இருந்த போதும், தூண்கள் மோசமாகக் காட்சியளித்ததால், மாற்று யோசனையாக வ.உ.சிதம்பரனார் மற்றும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஆகியோரது உருவப்படங்களை பிளக்ஸ் ஸ்டிக்கராக அடித்து தூணின் மீது ஒட்டியுள்ளனர்.



அவசர யோசனையாக இருந்தால், சிறப்பான முறையில் இரு தலைவர்களது படங்களும் அமைந்துள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், மக்களும் சற்று நேரம் நின்று படங்களைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள், இதே போல் கோவை மாநகரில் உள்ள அனைத்து தூண்களிலும் முக்கிய தலைவர்களின் படங்கள், கோவையின் அடையாளங்களைப் பறைசாற்றும் இடங்களின் புகைப்படங்களை ஒட்டினால் அழகாகவும் இருக்கும் அதே சமயம் தூண்களில் போஸ்டர்கள் ஒட்டுவதும் குறையும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...