வால்பாறை அருகே பள்ளி வளாகத்தை இடித்துச் சேதப்படுத்திய காட்டு யானைகள்..! மக்கள் அச்சம்!

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறை பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே காட்டு யானைகள் பள்ளி வளாகத்தை இடித்துச் சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, காட்டு யானைகள் இரவு நேரத்தில் வீடுகள் சத்துணவு மையம், மளிகை கடைகள், பள்ளி வளாகம் என்று உணவு தேடி, சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



இந்த நிலையில், வால்பாறை அருகே சேடல் டேம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் 8 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து, ஜன்னல் கதவை உடைத்து உள்ளிருந்த பொருட்களை சேதப்படுத்தியது.



மேலும், அருகில் இருந்த குழந்தைகள் காப்பகம் பகுதிக்குச் சென்று ஜன்னல் சுவரை உடைத்து உள்ளே இருந்த குழந்தைகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் முட்டை, அரிசி, சத்து மாவுகள் போன்றவற்றை எடுத்து சாப்பிட்டு சேதப்படுத்தியது.



இதையடுத்து, அருகிலிருந்த பொதுமக்கள் யானைகளை பந்தங்கள் மூலமாகவும் பட்டாசுகள் வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

மேலும், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறை பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...