காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறை பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே காட்டு யானைகள் பள்ளி வளாகத்தை இடித்துச் சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, காட்டு யானைகள் இரவு நேரத்தில் வீடுகள் சத்துணவு மையம், மளிகை கடைகள், பள்ளி வளாகம் என்று உணவு தேடி, சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், வால்பாறை அருகே சேடல் டேம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் 8 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து, ஜன்னல் கதவை உடைத்து உள்ளிருந்த பொருட்களை சேதப்படுத்தியது.

மேலும், அருகில் இருந்த குழந்தைகள் காப்பகம் பகுதிக்குச் சென்று ஜன்னல் சுவரை உடைத்து உள்ளே இருந்த குழந்தைகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் முட்டை, அரிசி, சத்து மாவுகள் போன்றவற்றை எடுத்து சாப்பிட்டு சேதப்படுத்தியது.

இதையடுத்து, அருகிலிருந்த பொதுமக்கள் யானைகளை பந்தங்கள் மூலமாகவும் பட்டாசுகள் வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
மேலும், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறை பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, காட்டு யானைகள் இரவு நேரத்தில் வீடுகள் சத்துணவு மையம், மளிகை கடைகள், பள்ளி வளாகம் என்று உணவு தேடி, சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், வால்பாறை அருகே சேடல் டேம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் 8 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து, ஜன்னல் கதவை உடைத்து உள்ளிருந்த பொருட்களை சேதப்படுத்தியது.
மேலும், அருகில் இருந்த குழந்தைகள் காப்பகம் பகுதிக்குச் சென்று ஜன்னல் சுவரை உடைத்து உள்ளே இருந்த குழந்தைகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் முட்டை, அரிசி, சத்து மாவுகள் போன்றவற்றை எடுத்து சாப்பிட்டு சேதப்படுத்தியது.
இதையடுத்து, அருகிலிருந்த பொதுமக்கள் யானைகளை பந்தங்கள் மூலமாகவும் பட்டாசுகள் வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
மேலும், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வனத்துறை பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.