சம்பவம் குறித்து மாவட்ட உணவு வழங்கல் அதிகாரியிடம் புகார் செய்யப் போவதாக 84 வயது முதியவர் தெரிவித்தார்.
கோவை: கோவையை சேர்ந்த 84 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், காய்ச்சல் காரணமாக கடையில் வாங்கிய பிரிட்டானியா ரஸ்க் (Britannia Rusk) பாக்கெட்டில் இறந்த நிலையில் பல்லி இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
கோவை கணபதி, வெங்கடேசபுரம், 3-வது தெரு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி (84), இவர் காய்ச்சல் காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடையில் பிரிட்டானிய ரஸ்க்கு பாக்கெட் வாங்கி பாலில் தொட்டு சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று பாக்கெட் தீரும் நிலையில் இருந்ததால், பாக்கெட்டை கொட்டி அதிலிருந்த ரஸ்கை எடுத்துள்ளார். அப்பொழுது, பாக்கெட்டின் உள்ளே இறந்த நிலையில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியான கிருஷ்ணசாமி, கம்பனியில் ரஸ்கை தயாரிக்கும் போதே, இந்த பல்லி உள்ளே இருந்து இறந்து போய் இருக்கலாம் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், என் வீட்டில் இரண்டு பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள். காய்ச்சல் உள்ளபோது வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தக் கூடிய மிக அவசியமான உணவு பொருளாகும்.
இதை எங்களுடைய பேரப்பிள்ளைகள், குழந்தைகள் பயன்படுத்தி இருந்தால் என்ன ஆவது என வருத்தம் தெரிவித்தார். மேலும், உடனடியாக இதுகுறித்து மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி இடமும் புகார் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
கோவை கணபதி, வெங்கடேசபுரம், 3-வது தெரு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி (84), இவர் காய்ச்சல் காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடையில் பிரிட்டானிய ரஸ்க்கு பாக்கெட் வாங்கி பாலில் தொட்டு சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று பாக்கெட் தீரும் நிலையில் இருந்ததால், பாக்கெட்டை கொட்டி அதிலிருந்த ரஸ்கை எடுத்துள்ளார். அப்பொழுது, பாக்கெட்டின் உள்ளே இறந்த நிலையில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியான கிருஷ்ணசாமி, கம்பனியில் ரஸ்கை தயாரிக்கும் போதே, இந்த பல்லி உள்ளே இருந்து இறந்து போய் இருக்கலாம் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், என் வீட்டில் இரண்டு பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள். காய்ச்சல் உள்ளபோது வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தக் கூடிய மிக அவசியமான உணவு பொருளாகும்.
இதை எங்களுடைய பேரப்பிள்ளைகள், குழந்தைகள் பயன்படுத்தி இருந்தால் என்ன ஆவது என வருத்தம் தெரிவித்தார். மேலும், உடனடியாக இதுகுறித்து மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி இடமும் புகார் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.