கோவையில் வாங்கிய ரஸ்க் பாக்கெட்டில் பல்லி..!! முதியவர் அதிர்ச்சி!

சம்பவம் குறித்து மாவட்ட உணவு வழங்கல் அதிகாரியிடம் புகார் செய்யப் போவதாக 84 வயது முதியவர் தெரிவித்தார்.


கோவை: கோவையை சேர்ந்த 84 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், காய்ச்சல் காரணமாக கடையில் வாங்கிய பிரிட்டானியா ரஸ்க் (Britannia Rusk) பாக்கெட்டில் இறந்த நிலையில் பல்லி இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

கோவை கணபதி, வெங்கடேசபுரம், 3-வது தெரு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி (84), இவர் காய்ச்சல் காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு கடையில் பிரிட்டானிய ரஸ்க்கு பாக்கெட் வாங்கி பாலில் தொட்டு சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று பாக்கெட் தீரும் நிலையில் இருந்ததால், பாக்கெட்டை கொட்டி அதிலிருந்த ரஸ்கை எடுத்துள்ளார். அப்பொழுது, பாக்கெட்டின் உள்ளே இறந்த நிலையில் பல்லி ஒன்று இறந்த நிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியான கிருஷ்ணசாமி, கம்பனியில் ரஸ்கை தயாரிக்கும் போதே, இந்த பல்லி உள்ளே இருந்து இறந்து போய் இருக்கலாம் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், என் வீட்டில் இரண்டு பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள். காய்ச்சல் உள்ளபோது வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தக் கூடிய மிக அவசியமான உணவு பொருளாகும்.

இதை எங்களுடைய பேரப்பிள்ளைகள், குழந்தைகள் பயன்படுத்தி இருந்தால் என்ன ஆவது என வருத்தம் தெரிவித்தார். மேலும், உடனடியாக இதுகுறித்து மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி இடமும் புகார் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...