உயிர் சேதம் ஏற்படும் முன் வீடுகளைத் தாக்கி வரும் யானையைப் பிடித்து முதுமலை காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்: கூடலூர் பகுதியில் வீடுகளைத் தாக்கி வரும் யானையைப் பிடித்து முதுமலை காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கூடலூர் வேடன்வயல் பகுதியில் உள்ள முருகதாஸ் என்பவரின் வீட்டை தாக்கிய யானை, வீட்டில் இருந்த அனைவரும் வேறு அறைக்குள் மாறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
பாடந்துரை செலுக்காடி, மூச்சிகண்டி, சுண்டவயல் பகுதியில் தொடர்ந்து வீட்டை சேதப்படுத்தி வரும் குட்டி அரிசி ராஜா மற்றும் அதனுடன் இருக்கும் யானை கும்கி யானை உதவியுடன் ஒரு வாரத்திற்கு முன் விரட்டிய பின்பு மீண்டும் வந்து இப்பகுதிகளில் உள்ள வீடுகளைச் சேதப்படுத்துவது தொடர் கதையாகியுள்ளது.
இந்த நிலையில், இவ்விரண்டு யானைகளை விரட்டுவதில் எந்த பயனும் இல்லை எனவும் உயிர் சேதம் ஏற்படும் முன் வீடுகளைத் தாக்கி வரும் குறிப்பிட்ட யானையைப் பிடித்து முதுமலை காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கூடலூர் வேடன்வயல் பகுதியில் உள்ள முருகதாஸ் என்பவரின் வீட்டை தாக்கிய யானை, வீட்டில் இருந்த அனைவரும் வேறு அறைக்குள் மாறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
பாடந்துரை செலுக்காடி, மூச்சிகண்டி, சுண்டவயல் பகுதியில் தொடர்ந்து வீட்டை சேதப்படுத்தி வரும் குட்டி அரிசி ராஜா மற்றும் அதனுடன் இருக்கும் யானை கும்கி யானை உதவியுடன் ஒரு வாரத்திற்கு முன் விரட்டிய பின்பு மீண்டும் வந்து இப்பகுதிகளில் உள்ள வீடுகளைச் சேதப்படுத்துவது தொடர் கதையாகியுள்ளது.
இந்த நிலையில், இவ்விரண்டு யானைகளை விரட்டுவதில் எந்த பயனும் இல்லை எனவும் உயிர் சேதம் ஏற்படும் முன் வீடுகளைத் தாக்கி வரும் குறிப்பிட்ட யானையைப் பிடித்து முதுமலை காப்பகத்தில் பராமரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.