நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து கிணத்துக்கடவு அண்ணாநகரில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுகவினர் கைப்பற்ற வேண்டும் என்று எம்.எல்.ஏ., செ. தாமோதரன் தெரிவித்தார்.


கோவை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து கிணத்துக்கடவு அண்ணாநகரில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதியில் உள்ள அதிமுக நகர செயலாளர் கே.என்.மூர்த்தி இல்லத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கிணத்துக்கடவு அதிமுக அவைத்தலைவர் சாந்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ எட்டிமடை சண்முகம், விவசாய அணி மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மலுமிச்சம்பட்டி ஒன்றிய அதிமுக செயலாளர் சதீஷ்குமார், மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிணத்துக்கடவு நகர அதிமுக செயலாளர் கே.என். மூர்த்தி வரவேற்றுப் பேசினார்.

இந்த கூட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., செ. தாமோதரன் கலந்து கொண்டு பேசியபோது, விரைவில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுகவினர் கைப்பற்ற வேண்டும் என்றும், அதற்காக அதிமுகவினர் தீவிர செயலாற்ற வேண்டும் என்று கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் ஆதிமுக நிர்வாகிகளான டி.எல்.சிங், மனோகரன், பிரபு, கண்ணம்மாள், லட்சுமணன், தங்கராஜ், கார்த்தி, தண்டபாணி, லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...