நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுகவினர் கைப்பற்ற வேண்டும் என்று எம்.எல்.ஏ., செ. தாமோதரன் தெரிவித்தார்.
கோவை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து கிணத்துக்கடவு அண்ணாநகரில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதியில் உள்ள அதிமுக நகர செயலாளர் கே.என்.மூர்த்தி இல்லத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு அதிமுக அவைத்தலைவர் சாந்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ எட்டிமடை சண்முகம், விவசாய அணி மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மலுமிச்சம்பட்டி ஒன்றிய அதிமுக செயலாளர் சதீஷ்குமார், மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிணத்துக்கடவு நகர அதிமுக செயலாளர் கே.என். மூர்த்தி வரவேற்றுப் பேசினார்.
இந்த கூட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., செ. தாமோதரன் கலந்து கொண்டு பேசியபோது, விரைவில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுகவினர் கைப்பற்ற வேண்டும் என்றும், அதற்காக அதிமுகவினர் தீவிர செயலாற்ற வேண்டும் என்று கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் ஆதிமுக நிர்வாகிகளான டி.எல்.சிங், மனோகரன், பிரபு, கண்ணம்மாள், லட்சுமணன், தங்கராஜ், கார்த்தி, தண்டபாணி, லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அண்ணா நகர் பகுதியில் உள்ள அதிமுக நகர செயலாளர் கே.என்.மூர்த்தி இல்லத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கிணத்துக்கடவு அதிமுக அவைத்தலைவர் சாந்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ எட்டிமடை சண்முகம், விவசாய அணி மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மலுமிச்சம்பட்டி ஒன்றிய அதிமுக செயலாளர் சதீஷ்குமார், மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிணத்துக்கடவு நகர அதிமுக செயலாளர் கே.என். மூர்த்தி வரவேற்றுப் பேசினார்.
இந்த கூட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., செ. தாமோதரன் கலந்து கொண்டு பேசியபோது, விரைவில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுகவினர் கைப்பற்ற வேண்டும் என்றும், அதற்காக அதிமுகவினர் தீவிர செயலாற்ற வேண்டும் என்று கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் ஆதிமுக நிர்வாகிகளான டி.எல்.சிங், மனோகரன், பிரபு, கண்ணம்மாள், லட்சுமணன், தங்கராஜ், கார்த்தி, தண்டபாணி, லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.