ஊட்டியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3-பேர் கைது.!!

ஊட்டியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மூவரை போலீசார் கைது செய்து, இவர்களிடமிருந்து, 25 ஆயிரத்து, 500 ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது.


நீலகிரி: ஊட்டியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட மூவரை போலீசார் கைது செய்து, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் கள்ளநோட்டு கொடுத்து மது கேட்டு தகராறு செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் டாஸ்மாக் மதுக்கடையில் மதுவாங்கிய நபரிடம் இருந்த பணத்தைச் சோதனை செய்யக் கிராம நிர்வாக அலுவலர் பிச்சைக்கனியிடம் கொடுத்து சோதனை செய்தனர். அந்த பணம் கள்ளநோட்டு என உறுதி செய்யப்பட்டது. ஊட்டி பி1 போலீஸ் ஸ்டேஷனில் கிராம நிர்வாக அலுவலர் பிச்சைக்கனி புகார் தெரிவித்தார்.



இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ., ராஜாராம் மேற்கொண்ட விசாரணையில், கோவையைச் சேர்ந்த தீனதயாளன், 32, அவரது கூட்டாளி பாண்டிச்சேரியைச் சேர்ந்த கோபிநாத், 25, ஊட்டி காந்தள் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான், 28, இவர்கள் மூலம் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது தெரியவந்தது.

இவர்களிடம் மேற்கொண்ட சோதனையில், 25 ஆயிரத்து, 500 ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...

கோவை கல்வீரம்பாளையத்தில் வீட்டுப் பூட்டை உடைத்து 4¾ சவரன் நகைகள் கொள்ளை

கோவை கல்வீரம்பாளையத்தில் வெறிச்சோடிக் கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4¾ சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொ...

கோவை கல்லூரி மாணவரை பீர் பாட்டிலால் தாக்கிய கும்பல் - மூவர் கைது

கோவை பீளமேட்டில் கல்லூரி மாணவர் யாசிர் அகமது மற்றும் அவரது நண்பர் ரோஷன் சஞ்சய் மீது 10 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டில்க...

நான்கு நாட்களில் சிறுவாணி அணையில் நீர்மட்டம் ஏறத்தாழ 2.5 அடி உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஜூலை 28ல் 20.27 அடியிலிருந்த...

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...